ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பலமா... பலகீனமா..???

உன்னை பற்றியே எண்ணிக்  கொண்டிருப்பதால்
உன்னை பற்றிக்  கவிதை எழுதும்  எண்ணம் கூட வரவில்லை எனக்கு...
நீ என் பலமா பலகீனமா..
புரியவில்லை எனக்கு........

திங்கள், 30 மே, 2011

Rathnavarigal..



ONE OF MY FAVOURITE TEXT FOR MY FRIEND:
Its amazing when strangers become friends but its sad when friends become strangers.I never want to loose you as my friend I met you as a stranger, now i have you as a friend.I hope we meet in next walk of life where friendship never ends I may not be the most important person in your life & surely not but I just hope that when you will hear my name you will smile and will say,I have a Friend in this name..
தஞ்சாவூர் ஓவியம்

                                    தஞ்சை  பெரிய கோவில்
 
 தஞ்சை  அரண்மனை


                                                  தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

 

வியாழன், 19 மே, 2011

என் மனது



            நீரோடையாய் இருக்கும் மனதை
              மீனாய் துள்ளிக் குதித்து
           சலசலக்க   வைக்கிறாய்
               ஆழிப் பேரலையாய்
           பொங்கி வழிகிறது மனது !

                நீ பார்க்கும் நேரங்களில்
                    என் விழிகள் உன்னைத் தவிர்த்தாலும் 
                 உன்னையே சுற்றி வருகிறது  மனது !

                  யதார்த்தமாய் நீஅனுப்பும்
                             காதல்  கவிதைகளைப் படிக்கையில்
                   எனக்காக நீ  அனுப்பியதாய்  எண்ணி
                               பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது மனது !

                      "பேச தோணலை" என்று நீ சொல்லும் போது
                               உன்னுள் புகுந்து,
                       நானே நீயாக மாறி
                        என்னுடன் பேச ஆசை கொள்கிறது மனது !

                      அன்று ' போடி' என்று
                             நீ சொல்கையில்
                        சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த மனது
                              இன்று பிறர் சொல்கையில்
                         அனலாய் கொதிக்கிறது..

                   "மனசு கஷ்டமாய் இருக்கு"
                        என்று நீ  கூறுகையில்
                    உன் மனதை வாங்கி
                         அதில் என் சந்தோஷங்களை நிரப்ப
                    ஆவலாய் துடிக்கிறது மனது !

                     உன் கைகோர்த்து
                          கடற்கரையில் கால் நனைக்கையில் 
                     ஜிஹர்தண்டாவாய் சில்லிடுகிறது மனது !

                          பேருந்தில்
                                 உன் தோள் சாய்ந்து
                          விழிமூடி உறங்க நினைக்கையில்
                                   உறங்க அடம் பிடிக்கிறது  மனது !


                   என்னுடம் பேசுகையில்
                            தூக்கம் வருகிறது  என்கிறாய் நீ...
                    உன்னுடன் பேசுவதாலேயே உறங்க மறு( ற)க்கிறது மனது !



புதன், 11 மே, 2011

போதும்.........போதும்!!!!

தூரத்தில் சூரியனாய் பிராகாசிக்க வேண்டாம்...
அருகில் அகலாய்  இரு.. போதும்!

உலகத்தை ஆள வேண்டாம்..
எனக்கே உலகமாய் இரு.. போதும்!

நான் அழும் போது நீ அழ வேண்டாம்....
        எனக்கு புன்னகைக்க கற்றுக் கொடு.. போதும்!

நான் இன்புறும் வேளையில் என் மகிழ்ச்சியை நீட்டிக்கக்கூட வேண்டாம்...
        நான் அழாதிருக்கக்  காரணம் கற்றுக்கொடு.. போதும்!

சுமைதாங்கியாய் நீ இருக்க வேண்டாம்...
        என் உறவை சுமந்து இரு போதும்....

தோல்வியின் போது வெற்றியின் அவசியத்தை சொல்ல வேண்டாம்...
        தோல்வியின் காரணத்தை  சொல்.. போதும்!

நான் உயர நீ வழிவகுக்க வேண்டாம்..
         நான் தாழாதிருக்க உதவி செய்.. போதும்!

என் சிறப்பை பாராட்ட வேண்டாம்...
          தவறை சுட்டிக்காட்டு.. போதும்!
















நீ என்னில் பாதியாய் இருக்க வேண்டாம்...
          என்றும் என்
நண்பனாய்  இரு...
                             போதும்!!!!

செவ்வாய், 10 மே, 2011

எங்கோ படித்தது.....பிடித்தது.

நீ சிரித்தால் திருநாள்
உன் கோபம் அனல் வெயில்
உன் சோகம் மரண ஓலம்
உன் காதல் என் வாழ்வின் அர்த்தம்
உன்னை....
உன்னை மட்டுமே
பிரதிபலிக்கும் விநோதக் கண்ணாடி  நான்!!


என் குப்பைக் கோபங்கள்
கொட்டி வைக்க ஒரு இதயம்...
என் ஓயாப் புகார்கள்
தாங்கிக் கொள்ளும் தாய்மடி...
என் குட்டித் தோல்விகள்
சாய்ந்து அழ ஒரு தோள்....
இதயத்தை ஊடுருவி பார்க்கும் கண்கள்....
கவலைகள் துடைக்கும் 
ஒரு வசீகரப் புன்னகை....
 அத்தனையும் தருகிறாய் நீ!


உன் கெஞ்சல் சுகம் வேண்டியே
தினமும் சண்டைக்குக் காரணம் 
தேடுகிறேன் நான்!
  
தலைகோதி நீ வைத்து விடும்
விபூதியின் வாசம்...
எனக்காக நீ செய்த கஞ்சியின் சுவை ..
என் கையில் பரவும்
 உன் உள்ளங்கையின் இளஞ்சூடு...
நள்ளிரவில் கண்விழித்தால் 
எனக்காக தூங்காமல் நீ..

உன்னைத் தவிர
யாரிடம் வேண்டுமானாலும் 
ஒப்புக்கொள்வேன்...
உன்னால் 
               என் நோயும் அழகாவதை!!

 

திங்கள், 9 மே, 2011

ரகசிய சிநேகிதனே...


வாழ்வின் 
நெளிவு சுளிவுகளில்
பயணிகின்றேன்......
              உன் நினைவுகளை சுமந்தபடி..
உன்னாலான  காயங்களும்   மாயமாயின
               உன் ஒற்றைப்   புன்னகையால்..............  
என் கோபங்களும்  தாபங்களும் தூபமாயின
                உன் வாசகத்தின் சாகசத்தால்..............


மௌனம் என் 
           மொழியானது......
சிரிப்பு
           என் அழுகையானது...

உன் நினைவுகள்
என்னை முழுமையாக 
மூழ்கடிகின்றன......
எழுவதா...
வீழ்வதா....
என்று
 சுதாரிப்பதற்குள்..


கண்ணெல்லாம் 
     உன்  பின்பம்...
நாசி எங்கும்
     உன்  வாசனை.....
உதடும் முனுகும்  
     உன் பெயரை...
காதில் 
     உன் வார்த்தைகள்...
நினைவெல்லாம் 
       நீ.........

உன்னால் வெளியே சிரித்து
     எனக்குள்ளேயே   கண்ணீர் வடிக்கின்றேன்...
என் சிரிப்பின் அர்த்தம் 
நீ....
என் அழுகையின் காரணம் 
நீ...



சொல்ல முடியாத சோகங்கள்கூட
     உன் வருகையால் 
காற்றால் கலைக்கப்படும்
மேகம் போல  மறைவதை 
              நீ அறிவாயா..??

என் ஒவ்வொரு அசைவும் 
             உன்னையே பிரதிபலிக்கின்றது.....
 என் ஒவ்வொரு செயலும்
              உன்னையே முன்நிருத்துகின்றது....
என் ஏக்கங்கள் 
             என் மீது  அம்பெய்துகின்றன....
 உன் பார்வையின் வீச்சு 
                        என்னை வீழ்த்துகின்றது...



இன்னும்......... இன்னும்.......
சொல்லியவையும்....
சொல்லாதவையும்......
என்னுள்ளேயே புதையுண்டன.....
வெளிப்படுத்த
         "  நீ  " இல்லாமல்...........