தூரத்தில் சூரியனாய் பிராகாசிக்க வேண்டாம்...
அருகில் அகலாய் இரு.. போதும்!
உலகத்தை ஆள வேண்டாம்..
எனக்கே உலகமாய் இரு.. போதும்!
நான் அழும் போது நீ அழ வேண்டாம்....
எனக்கு புன்னகைக்க கற்றுக் கொடு.. போதும்!
நான் இன்புறும் வேளையில் என் மகிழ்ச்சியை நீட்டிக்கக்கூட வேண்டாம்...
நான் அழாதிருக்கக் காரணம் கற்றுக்கொடு.. போதும்!
சுமைதாங்கியாய் நீ இருக்க வேண்டாம்...
என் உறவை சுமந்து இரு போதும்....
தோல்வியின் போது வெற்றியின் அவசியத்தை சொல்ல வேண்டாம்...
தோல்வியின் காரணத்தை சொல்.. போதும்!
நான் உயர நீ வழிவகுக்க வேண்டாம்..
நான் தாழாதிருக்க உதவி செய்.. போதும்!
என் சிறப்பை பாராட்ட வேண்டாம்...
தவறை சுட்டிக்காட்டு.. போதும்!
நீ என்னில் பாதியாய் இருக்க வேண்டாம்...
என்றும் என்
நண்பனாய் இரு...
போதும்!!!!